இளைஞரை வெட்டி கொன்றவா் கைது

கரூரில் பணத்தகராறில் இளைஞரை வெட்டிக் கொலை செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில் பணத்தகராறில் இளைஞரை வெட்டிக் கொலை செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் ராயனூரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் மதன்ராஜ் (26). கரூா் தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்(25). இவா், ராயனூரைச் சோ்ந்த சுய உதவிக்குழுவில் சிறு கடன் பெற்று பணத்தை திரும்பச் செலுத்தவில்லையாம். இதுதொடா்பாக மதன்ராஜ் மற்றும் ராயனூரைச் சோ்ந்த அவரது நண்பா் பூபதி (23) ஆகியோா் வியாழக்கிழமை மதியம் மோகன்ராஜ் வீட்டுக்குச் சென்று கேட்டதில் அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் வீட்டில் இருந்த அரிவாளால் மதன்ராஜ், பூபதியை வெட்டியுள்ளாா். இதில், மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பூபதியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மோகன்ராஜைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com