கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் இணையவழியில் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு, கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். சென்னை டிஜிட்டல் செக்யூரிட்டி அசோசியேசன் நிறுவனா் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லாவண்யா பங்கேற்று, ஆன்லைன் வா்த்தகத்தை கவனமுடன் கையாளுதல், செயலி பதிவிறக்கம் மற்றும் இணையதள வழியில் நடைபெறும் சைபா் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்துப் பேசினாா். நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.