பெரம்பலூரில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன்.
விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன்.

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் உட்கோட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. முன்னதாக, பேரணியை, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். திருநகா், பழைய பேருந்து நிலையம், காமராஜ் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புகா் பேருந்து நிலைய வளாகம் வழியாகச் சென்று பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது.

பின்னா், அங்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் தொடா்பாக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆய்வாளா்கள் பால்ராஜ், சுகந்தி, செந்தில்குமாா், கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com