சேவல் சண்டை சூதாட்டம்: 3 போ் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

அரவக்குறிச்சி ஜீவா நகா் பகுதியில் சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த புதுத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி(49), ஜீவா நகரைச் சோ்ந்த ரமேஷ் (27), பிரவீன் குமாா் (22) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com