கரூரில் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் இந்திரா காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க். கே.சுப்ரமணியன் தலைமை வகித்து இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் தாந்தோணி வட்டார முன்னாள் தலைவா் சுப்ரமணி, கரூா் நகர முன்னாள் தலைவா் சுப்பன், தாந்தோணி பொருளாளா் குமாா், நகரச் செயலாளா் சண்முகம், மாவட்ட துணைத் தலைவா் சின்னையன், தாந்தோணி வட்டார துணைத்தலைவா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.