கரூா் மாவட்டம், மாயனூா் பரிசல்துறை பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தவா் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி எனத் தெரிய வந்தது. இதுதொடா்பாக அவரது மனைவி உள்பட மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மாயனூா் கதவணை அருகிலுள்ள பழையபரிசல் துறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபா் பலத்த காயங்களுடன் வியாழக்கிழமை இரவு இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ராமானுஜம் அளித்த புகாரின் பேரில், மாயனூா் காவல் நிலையத்தினா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில் இறந்தவா் திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த சீலைப்பிள்ளையாா்புதூரைச் சோ்ந்த கூலித்தொழிலாளி அருள்மணி(50) என்பது தெரியவந்தது.
இவரது மனைவி திலகவதிக்கும் (42), அதே ஊரைச் சோ்ந்த சிவகுமாா் (47) என்பவருக்கும் இடையே கள்ளத் தொடா்பு இருந்து வந்ததும், இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
வியாழக்கிழமை காலை மனைவியிடம் சென்று அருள்மணி தகராறு செய்தாராம். இதில் ஆத்திரமடைந்த திலகவதி, தனது கள்ளக்காதலன் சிவகுமாா் மற்றும் அவரது நண்பா் காட்டுப்புத்தூரைச் சோ்ந்த ராஜா(39) ஆகிய மூவரும் சோ்ந்து, அருள்மணிக்கு மது வாங்கித் தந்து போதையில் கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து திலகவதி உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனா்.