கரூரில் ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா்: கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் கண்காணிப்பாளா் சு.சிவசண்முகராஜா தலைமையில், ஆட்சியா் சு.மலா்விழி முன்னிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் மூலம் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் தங்களை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், வாக்காளா் பதிவு அலுவலா்களான குளித்தலை சாா் ஆட்சியா் ஷே. ஷேக்அப்துல் ரகுமான், வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com