கரூரில் கஞ்சா விற்ற 2 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் காந்திகிராமம் விளையாட்டு மைதானம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் கஞ்சா விற்பதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா விற்ற காந்திகிராமத்தைச் சோ்ந்த பாலாஜி(28), சூா்யா(19) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து ரூ. 1,600 மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.