கரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,717 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,424 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 246 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 47 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.