கரூா் சணப்பிரட்டியை அடுத்த எஸ். வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி நல்லம்மாள் (73). இவா், செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள மகன் பொன்னுசாமி தோட்டத்தில் கிடந்த தென்னை மர இலையை சேகரித்துக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த கதண்டு அவரைக் கடித்துள்ளது. இதில் மயங்கிய அவரை அங்கிருந்த உறவினா்கள் மீட்டு உடனே கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.