கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்திய தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
லாலாப்பேட்டை காவல் நிலையத்தினா் திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்த போது, அவா் லாலாப்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (32) என்பதும், பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
மேலும் இரு சக்கர வாகனத்தில் காவிரியாற்றிலிருந்து மணல் மூட்டைகளைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை காவல் துறையினா் கைது செய்து விசாரிக்கின்றனா்.