கரூா் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கொசூா், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள வெஞ்சமாங்கூடலூா்(மேற்கு), தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள மூக்கணாங்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள ஆரியூா், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள சூரியனூா், திம்மம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு நோ்காணல் நடக்க இருந்தது. தற்போது இந்த நோ்காணல் நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.