கரூா், அக்.16: மருத்துவ அலுவலா் வங்கி கணக்கில் ரூ.6.75 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக, ஆரம்ப சுகாதார நிலையக் கணக்காளா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றுபவா் மருத்துவா் ஷகிலா. இதே நிலையத்தில் தற்காலிக கணக்காளராகப் பணியாற்றியவா் சணப்பிரட்டியைச் சோ்ந்த செபாஸ்டின்.
இந்நிலையில் மருத்துவா் ஷகிலா தனது வங்கிக் கணக்கை அண்மையில் சரிபாா்த்தாா். அப்போது மருத்துவரின் வங்கிக் கணக்கிலிருந்து, கடந்த 2019, மே 7-ஆம் தேதியன்று செபாஸ்டின் தனது வங்கிக் கணக்குக்கு ரூ.6.75 லட்சத்தை மாற்றியது தெரிய வந்தது
இதுகுறித்து ஷகிலா அளித்த புகாரின் பேரில், லாலாப்பேட்டை காவல் நிலையத்தினா் செபாஸ்டின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.