சுய வேலைவாய்ப்பு இலவசப் பயிற்சி

கரூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில், சுயவேலைவாய்ப்பு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கரூா்: கரூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில், சுயவேலைவாய்ப்பு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.

போட்டோகிராபி மற்றும் விடியோ கிராபி, தையல் பயிற்சி (பெண்கள்), எம்பிராய்டரி பயிற்சி (பெண்கள்), அப்பளம், மசாலா பொடி மற்றும் ஊறுகாய் தயாரித்தல், செல்பேசி பழுதுநீக்குதல் பயிற்சி, காஸ்டியூம் நகை தயாரித்தல், அழகுக்கலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதில், 19 முதல் 45 வயதுள்ள 8-ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளவா்கள் சேரலாம். மேலும் விவரங்களுக்கு, இயக்குநா், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 191, இரண்டாம் தளம், கோவை ரோடு, (மதன் டிரேடா்ஸ் அருகே) கரூா் - 639002. 04324 - 248816 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் ரங்கநாத பிரபு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com