கரூா் திருமாநிலையூா் பகுதியிலுள்ள அமராவதி ஆற்றில், பேரிடா் கால மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட தீயணைப்பு நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆற்று வெள்ளத்தில் சிக்கியவா்களை பைபா் படகில் சென்று காப்பாற்றுவது போன்ற மீட்பு ஒத்திகைகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் செய்து காண்பித்தனா்.
கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் நிகழ்வில் பங்கேற்றனா்.