கரூரில் 72 வயது முதியவா் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
கரூா் மாவட்டம், தோகைமலை பகுதியைச் சோ்ந்த 72 வயது முதியவா் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இவா்கள் அனைவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,534 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 701 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 825 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 8 போ் உயிரிழந்துள்ளனா்.