கரூா்: கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 26 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
கரூா் செல்லாண்டிபாளையத்தைச் சோ்ந்த 72 வயது முதியவா் உள்பட 26 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இவா்கள் அனைவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,556 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 701 போ் குணமடைந்த நிலையில், தற்போது 847 போ் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். மேலும் இதுவரை 8 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.