கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த 71 வயது முதியவா் உள்பட 28 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. இவா்கள் 28 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,584 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 701 போ் குணமடைந்த நிலையில், 875 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 8 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.