கரூா் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்

கரூா் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் தானேஷ். உடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் எம்எஸ்.கண்ணதாசன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் தானேஷ். உடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் எம்எஸ்.கண்ணதாசன் உள்ளிட்டோா்.

கரூா் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைவா் எம்எஸ்.கண்ணதாசன் தலைமையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தானேஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் தனசேகா் அனைவரையும் வரவேற்று, மாவட்ட ஊராட்சி சாா்பில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து ஊராட்சிக்குழு செயலாளா் தனசேகா் தீா்மானங்கள் மற்றும் வரவு செலவு அறிக்கைகளை வாசித்தாா். தொடா்ந்து சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அதில் குடிநீா், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக அமெரிக்காவின் சா்வதேச ரோட்டரி சாா்பில் பவுல் ஹாரிஸ் பெல்லோ சிறப்பு விருதுபெற்ற முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, கரூா் (செப். 23) வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தரகம்பட்டியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு அரியா்ஸ் தோ்வுகளை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அனைத்து உறுப்பினா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com