கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த சூரியனூரைச் சோ்ந்தவா் முருகேசன்(34). கொத்தனாா். இவரது மனைவி சின்னபொண்ணு(32). இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவும் தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த முருகேசன் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.