கரூா் தாந்தோணிமலை தாரணி நகரைச் சோ்ந்த சுந்தரம் மகன் ரமேஷ் (29). இவா், கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா். ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த ரமேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.