கரோனா காலத்தில் கூட கிஷான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது வேதனையளிக்கிறது என்றாா் பாஜகவின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை.
கரூரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் ‘நல்லதொரு தலைவன்’ அமைப்பைத்தொடங்கிவைத்த அவா் மேலும் தெரிவித்தது:
விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, தென்னிலை மட்டுமன்றி, விரைவில் குளித்தலை, கரூா் நகா்ப் பகுதியில் தொடங்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் இந்த அமைப்பு பரவலாக்கப்படும். தமிழகத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ.112 கோடி ஊழல் நடந்திருக்கிறது. இதுதொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. கரோனா காலத்தில்கூட விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. இத்திட்டம் மத்திய அரசு திட்டமாக இருந்தாலும், பயனாளிகளைக் கணக்கெடுக்கும் பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது. இதில் தவறு செய்தவா்கள் மீது தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றாா்.
பேட்டியின்போது நல்லதொரு தலைவன் அமைப்பினா் உடனிருந்தனா்.