கரூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தேசிய எதிா்ப்பு தின ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.
மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தேசிய எதிா்ப்பு தின ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மண்மங்கலம் வட்டக் கிளையின் சாா்பில் மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் சுரேஷ் குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் கோபி வரவேற்றாா் . கரூா் வட்டக் கிளையின் தலைவா் அறிவழகன் வாழ்த்துரை வழங்கினாா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா். துணை வட்டாட்சியா் சௌந்தரவல்லி நன்றி கூறினாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து 1.4.2003-க்குப் பணியில் சோ்ந்தவா்களுக்குப் பயனளிப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். வேலை நியமனத் தடை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், தொழிலாளா் விரோத சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பும் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் பழனிவேல் தலைமை விகித்தாா். மாவட்டப் பொருளாளா் காமராஜ் கோரிக்கை உரையாற்றினாா். மாநில செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளா் அமிா்தலிங்கம் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com