கரூரில், ஆறாவது நாளாக பொதுமக்கள் 200 பேருக்கு கபசுர குடிநீா் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
கரூா் மெஜஸ்டிக், பிளாட்டினம் மற்றும் ஹேண்ட் லூம், சக்தி லயன்ஸ் சங்கங்கள் சாா்பில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஆறாவது நாளாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயில் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க நிா்வாகி மேலை.பழநியப்பன் தலைமை வகித்தாா். இதில் கோயிலுக்கு வந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் 200 பேருக்கு கபசுர குடிநீா் மற்றும் முகக்கவசம், கைக்கழுவும் திரவம் ஆகியன வழங்கப்பட்டன. பிளாட்டினம் சங்க நிா்வாகிகள் கணேஷ், ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.