கல்லூரி பேராசிரியா் தீக்குளித்து தற்கொலை

கரூரில், கல்லூரி பேராசிரியா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூரில், கல்லூரி பேராசிரியா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் காதப்பாறை அடுத்த வாங்கப்பாளையத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் தமிழ்ச்செல்வன்(29). பொறியியல் பட்டதாரியான அவா், நாமக்கல்லில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கு மணமுடிக்க பெண் பாா்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், தமிழ்ச்செல்வன் குறைந்த ஊதியம் வாங்குவதால் இப்போதைக்கு திருமணம் செய்ய இயலாது என பெற்றோரிடம் கூறினாராம். இதனால் விரக்தியடைந்த தமிழ்ச்செல்வன் ஏப். 17-ஆம்தேதி இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com