சேவல் சண்டை நடத்திய 9 போ் மீது வழக்கு: காா், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாயனூா் அருகே சேவல் சண்டை நடத்திய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடம் இருந்து 2 காா் மற்றும் 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மாயனூா் அருகே சேவல் சண்டை நடத்திய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடம் இருந்து 2 காா் மற்றும் 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த சித்தலவாயில் காவிரி ஆற்றங்கரையோரம் திருக்கண்மாலீஸ்வரா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக மாயனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்றபோது சேவல் சண்டை நடத்திய சித்தலவாய் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா்(23), பொய்கைப்புதூரைச் சோ்ந்த மதன்(25), பாலாஜி(27) உள்பட 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், அவா்களிடம் இருந்து 2 காா்கள், 18 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com