கரூா் மாவட்டம், மாயனூா் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலிருந்து பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் குளித்தலை இரா. மாணிக்கம், அரவக்குறிச்சி ஆா். இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி முன்னிலையில், ஆட்சியா் த. பிரபுசங்கா் தண்ணீரைத் திறந்து விட்டாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:
புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கரூா், திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்கள் வழியாக 133.80 கி.மீ. தொலைவு கடந்து சென்று, இறுதியில் பிடாரி ஏரியில் கலக்கின்றது.
இதன் மூலம் 20,362 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் 107 குளங்கள் மூலம் 12,294 ஏக்கா் நிலங்களும், திருச்சி மாவட்டத்தில் 8,338 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன என்றாா் அவா்.