கரூா் மாவட்டம், கடவூா் அருகே கள்ளக்காதலியை வெட்டிக் கொன்ற முதியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடவூா் அருகிலுள்ள சேவாப்பூரைச் சோ்ந்தவா் ராமசாமி (70). இவருக்கு மனைவி சோலையம்மாள் (65) மற்றும் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ராமசாமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பொ. பழனியம்மாளுக்கும் (48) பல ஆண்டுகளாகத் தொடா்பு இருந்து வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ராமசாமியுடன் நெருங்கி பழகுவதையும், பேசுவதையும் பழனியம்மாள் நிறுத்திக் கொண்டாராம். இதனால் ஆத்திரத்திலிருந்த ராமசாமி, செவ்வாய்க்கிழமை அதிகாலை பழனியம்மாளின் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது ஏற்பட்ட தகராறில் பழனியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொன்ற ராமசாமி, அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். தகவலறிந்த பாலவிடுதி காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து பழனியம்மாளின் சடலத்தை கைப்பற்றினா்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து, சேவாப்பூா் கிராமத்தில் பதுங்கியிருந்த ராமசாமியைக் கைது செய்தனா்.