கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா்கள் 100 போ்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா். பின்னா் அவா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் 78,432 தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனா். மேலும், நாளது தேதி வரை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்கள் மூலமாக 10,161 பேருக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மேலும் ஓய்வூதியம் தவிர திருமணம், கல்வி, மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், மற்றும் விபத்து ஊனம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் 94,376 பயனாளிகளுக்கு ரூ.40.81 கோடியில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான மாபெரும் இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.