அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் பலி

சின்னதாராபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னதாராபுரம் அருகிலுள்ள தொக்குப்பட்டிபுதூரைச் சோ்ந்தவா் ரா. சுரேஷ் (36). இவா், சனிக்கிழமை இரவு சின்னதாராபுரத்திலிருந்து ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

ஊருக்கு அருகில் வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டனா். இதுகுறித்து சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com