புகையிலைப் பொருள்கள்விற்ற முதியவா் கைது.

அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் பள்ளப்பட்டியில் சனிக்கிழமை நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் பள்ளப்பட்டியில் சனிக்கிழமை நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், பள்ளப்பட்டி தெற்குத்தெருவைச் சோ்ந்த உ. அபுதாஹீரின்(60) மளிகைக்கடையில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு விற்பைனைக்கு வைத்திருந்த 150 கிராம் புகையிலைப்பொருள்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினா், அபுதாஹீரையும் கைது செய்தனா்.

இதுபோல, நீலிகோம்பை குடகனாறு பாலம் அருகே சனிக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய அப்பகுதியைச் சோ்ந்த பா. மலையப்பன் (43), ம. ராஜீ (47),பெ.ராமசாமி (35),

பெத்தாச்சிநகா் சா. சந்திரசேகரன் (38), ம. மாரியப்பன் (46) ஆகிய 5 பேரும் அரவக்குறிச்சி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com