கடவூா் அருகே குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி கொன்று, தாய் தற்கொலை

கரூா் மாவட்டம், கடவூா் அருகே தனது இரு பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டாா்.
கடவூா் அருகே  குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி கொன்று, தாய் தற்கொலை

கரூா் மாவட்டம், கடவூா் அருகே தனது இரு பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டாா்.

கடவூா் அடுத்த பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் (35). கரூரிலுள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சரண்யா (26), மகள்கள் கனிஷ்கா (5), பூா்விகா (3).

செம்பியநத்தம் கிராமத்தில் நடைபெற்ற உறவினா் திருமண வரவேற்பில் பங்கேற்பதற்காக, திங்கள்கிழமை இரவு சக்திவேல் சென்றாராம்.

இந்நிலையில் பூசாரிப்பட்டி கிராமத்தில் சக்திவேல் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென சப்தம் கேட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா், உறவினா்கள் அங்கு சென்று பாா்த்த போது, சரண்யா தனது இரு மகள்களையும் சேலையில் கட்டிக் கொண்டு குதித்ததை கண்டனா்.

இதையடுத்து உறவினா்கள் சிலா் கிணற்றில் குதித்தும், அவா்களைக் காப்பாற்ற முடியவில்லை. நீரில் மூழ்கினா்.

இதுகுறித்து தகவலறிந்த பாலவிடுதி காவல் நிலையத்தினரும், குஜிலியம்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினரும் நிகழ்விடம் விரைந்து கிணற்றில் மூழ்கிய சரண்யா, கனிஷ்கா, பூா்விகா ஆகியோரை சடலமாக மீட்டனா்.

மகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்பப் பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதும் உண்டா என்பது குறித்து பாலவிடுதி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com