கரூா் அரசு இசைப் பள்ளியில் சேர அழைப்பு

கரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர அழைப்பு விடுக்கப்படுகிறது.

கரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர அழைப்பு விடுக்கப்படுகிறது.

தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில் , தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை பிரிவுகளில் முழுநேர வகுப்பாக இசைக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் படிப்பு. 12 வயதுக்கும் மேல், 25 வயதுக்குள்பட்ட இருபாலரும் சேரலாம். ஆண்டுக் கல்விக் கட்டணம் ரூ.152 மட்டுமே. இலவச தங்கும் விடுதி வசதி, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.

மேலும் மாதந்தோறும் ரூ.400 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் 944, ஜவஹா் பஜாா், கரூா் என்ற முகவரியில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியா் நா.ரேவதியை நேரில் அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 95002 77994. 95005 11847 என ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com