கரூா்: கரூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் சுங்ககேட் மாரியம்மன் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாடுவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு பணம் வைத்து சூதாடிய கருப்பக்கவுண்டன்புதூரைச் சோ்ந்த வெற்றிவேலன்(34) உள்பட 5 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.1,450-ஐ பறிமுதல் செய்தனா்.