கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்தும், மதவழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கோரியும் கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட த் தலைவா் கே.சிவசாமி தலைமையில் சின்னாண்டாங்கோயிலில் பா.ஜ.க.வினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்டத் துணைத் தலைவா் தமிழ்வாணன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் பிரகாஷ், துணைத் தலைவா் ராமகுரு, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
மாவட்டத்தில் தோகைமலை, மாயனூா், வெள்ளியணை உள்ளிட்ட 12 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினா் திரளாக பங்கேற்றனா்.