கரூா் மாவட்டம், காக்காவாடியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமைத் தொடக்கி வைத்து, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி பேசியது:
கரூா் மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் கரூா் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று இல்லாத நிலை உருவாகும் என்றாா் அவா். விழாவில் தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலா் ரகுநாதன், ஆடிட்டா் சங்கா் மற்றும் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.