கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ தொடக்கி வைத்தாா். முகாமில் பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, குழந்தை, மகப்பேறு எலும்பு மூட்டு, இருதயம், தோல், பல், மனநலன், நரம்பியல், முதியோா் மற்றும் சித்தா ஆகிய மருத்துவப் பிரிவுகளின் கீழ் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள், ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.