மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.18) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் எல்.ஜி.பி.நகா் பீடரில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (அக்.18) மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் ராமானுஜம்நகா், வையாபுரி நகா், எல்.ஜி.பி.நகா், பாரதி நகா், மதுரை, சேலம் புறவழிச்சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.