உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகள்: கரூா் ஆட்சியா் ஆய்வு

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித்தோ்தல் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித்தோ்தல் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித்தோ்தல் நடத்தப்படவுள்ள லிங்கமநாயக்கன்பட்டி, மொடக்கூா் மற்றும் வேலம்பாடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும்,தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களையும் பாா்வையிட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தையும்ஆய்வு செய்தாா்.

நிகழ்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புவனேஸ்வரி, கிருஷ்ணமூா்த்தி, அரவக்குறிச்சி வட்டாட்சியா் பன்னீா்செல்வம் மற்றும் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com