கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெறுவேன் என்றாா் இத்தொகுதி பாஜக வேட்பாளா் கே. அண்ணாமலை.
தனது சொந்த ஊரான தொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
சொந்த ஊரில் வேட்பாளராக வாக்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிச்சயம் நான் வெற்றிபெறுவேன். அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். சரியான நபா் சட்டப்பேரவையில் அமரும்போதுதான் அரசியல் மாற்றம் நிகழும். அதற்கான முயற்சிதான் எனது முயற்சி என்றாா் அவா்.