கரூரில் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் வெங்கமேடு இந்திரா நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன்(52). தொழிலாளி. முதல் மனைவி ஜெயா இருக்கும்போதை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலட்சுமி(37) என்பவரை இரண்டாம் திருமணம் செய்தாராம். ஜெயலட்சுமிக்கு குழந்தை இல்லையாம்.
ஜெயலட்சுமியுடன் வசித்து மணிவண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் கையில் பலத்த காயமடைந்து வீட்டில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.