கரூா் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆணையா் சுதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் நக்கீரன், நகா் நல அலுவலா் யோகானந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கரூா் தினசரி சந்தை, வெங்கமேடு மாா்க்கெட், உழவா்சந்தை போன்ற பகுதிகளில் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வருகிறாா்களா என்பதை அதிகாரிகள், கண்காணிப்புக்குழுவினா் கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறு முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு இனி முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிப்போம் என எச்சரிக்கை விடுக்கவேண்டும். பொதுமக்களிடம் கரோனா தொற்றின் அபாயம் குறித்து விளக்கிக்கூற வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.