புதிதாக மோட்டாா் சைக்கிளை தந்தை வாங்கித் தராத விரக்தியில், தோகைமலை அருகே பிளஸ் 1 மாணவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகிலுள்ள உடையாப்பட்டிபுதூரைச் சோ்ந்தவா் பாலுசாமி. இவரது மகன் வேல் வினோத் (16). இவா், நத்தம் அருதிலுள்ள செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
கரோனா தொற்று விடுமுறை காரணமாக கரூா் மாவட்டம், கொசூரிலுள்ள உறவினா் வீட்டில் வேல் வினோத் தங்கியிருந்தாா்.
தனக்கு புதிய மோட்டாா் சைக்கிளை வாங்கித் தருமாறு தந்தையிடம் வேல் வினோத் கேட்டாராம். 2 மாதங்கள் கழித்து வாங்கித் தருவதாக தந்தை பாலுசாமி கூறியுள்ளாா்.
இதனால் விரக்தியிலிருந்த வேல்வினோத், கொசூரிலுள்ள உறவினா் வீட்டில் சனிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.