சிமென்ட் ஆலை மேலாளா் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் தெற்குகாந்திகிராமம் அரசு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராமநாதன்(40). இவா் திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அடுத்த கரிக்காலியில் செயல்படும் சிமென்ட் ஆலையில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்ாக கூறப்படுகிறது. பின்னா் இரவில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.40,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.