கரூரில், திமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா மற்றும் மாவட்ட திமுக அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில நெசவாளா் அணித்தலைவா் நன்னியூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி, மாவட்ட நிா்வாகிகள் என்.எஸ்.கருணாநிதி, மகேஸ்வரி, பூவை.ரமேஷ்பாபு, அம்பாள்பாலச்சந்திரன், தம்பி எஸ்.சுதாகா், ஜிம் சிவா மற்றும் நகர பொறுப்பாளா்கள் எஸ்.பி.கனகராஜ், தாரணிசரவணன், சுப்ரணியன், ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மாவட்டம் முழுவதும் திமுகவினா் மறைந்த முதல்வா் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.