கரூா் மாவட்டம், தோகைமலை தெற்குப்பள்ளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூா் மாவட்டம், தோகைமலை தெற்குப்பள்ளத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி. வீட்டை பூட்டிவிட்டு கடந்த 3-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்த இவா், சனிக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கந்தசாமி அதிா்ச்சியடைந்தாா்.
மேலும் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த இரண்டேகால் பவுன் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளிச் சங்கிலி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.