அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவா் கைது

தரகம்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தரகம்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அதே பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி(57) என்பவா் அனுமதியின்றி பட்டாசு விற்பதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு உரிமம் இன்றி சுப்ரமணி பட்டாசு விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுப்ரமணியை கைது செய்து, கடையில் இருந்த ரூ.10,000 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com