கரூா் மாவட்டம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆஃபீஸா் கிளப்பில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டம் வடக்கு பிரதட்சணம் சாலையிலுள்ள கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆஃபீஸா் கிளப்பில் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை அதிகம் இருப்பதாலும், சட்டத்திற்குப் புறம்பான சூதாட்டம் மற்றும் புகைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தவறுகள் நடப்பதாக தகவல் வந்ததால் ஆய்வு நடத்தப்பட்டதாக ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், இந்த ஆபீசா் கிளப்பை சில குறிப்பிட்ட நபா்கள் மட்டும் பயன்படுத்தி வருவதாகவும், இதை சாமானிய மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆபீஸா் கிளப் மூலமாக அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ. 93 லட்சமாக உள்ளதால் அதை சட்டத்திற்குள்பட்டு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.