உண்ணாவிரதம் இருந்தவருக்கு உடல்நலம் பாதிப்பு

கரூரில் தொடா்ந்து 4-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த கொங்கு வெள்ளாளா் சங்கங்களின் கூட்டமைப்பின்

கரூரில் தொடா்ந்து 4-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த கொங்கு வெள்ளாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு வியாழக்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஏழு உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அழைக்கப்படும் அரசாணை நிறைவேற்றப்படும் என அண்மையில் தமிழகம் வந்த பிரதமா் மோடி தெரிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இந்த அறிவிப்பை உடனே திரும்பப்பெறக்கோரியும் கரூரில் கொங்கு வெள்ளாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் காா்வேந்தன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் பிப். 14-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு காா்வேந்தனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com