கரூரில் காா் மோதி தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் செம்மடை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா். அப்போது, கரூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், அவா் மீது மோதிவிட்டுச் சென்ற காா் ஓட்டுநா் யாா் என விசாரித்து வருகின்றனா்.